குனால் பகுதியில், சரஸ்வதி நதியின் கரையில் உள்ள மணம் மேடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய இடமாக இது கருதப்படுகிறது.
மண்பானைகள், முக்கோண டெர்ரகோட்டா வடிவங்கள், எழுத்துருக்கள், வெள்ளி காசுகள், வெள்ளி-தங்க நகைகள் ஆகியவையும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய மூவகையான பரிணாம வளர்ச்சியை இவ்விடம் உணர்த்துகிறது. குழிகள் வாழ்ந்த மக்கள் எப்படி களிமண் வீடு கட்டினார்கள் என்பதையும் அதன் பின் எப்படி செங்கல் கட்டிடங்கள் கட்டினார்கள் என்பதையும் இந்நாகரீகம் விளக்குகிறது.
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வேத காலமும், ஹரப்பாவிற்கு முந்தைய கலாச்சாரமும் ஒன்றெனக் கருதுகிறார்கள். ரிக்வேதத்தில் நம்பிக்கை இருந்ததை கருவளத்தின் குறியீடாக கருதப்படும் முக்கோண வடிவிலான டெர்ரகோட்டா வடிவம் உணர்த்துகிறது. மேலும் சரஸ்வதி நதிக்கரையில் குனால் என்ற பகுதி இருந்ததைப் பற்றி ரிக்வேதம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications