இந்த அற்புதமான கணபதிபுலே பீச் வெள்ளை நிறத்தில் வெள்ளியைப் போன்ற மணலைக்கொண்டுள்ளது. இந்தியாவின் கரீபியன் கடற்கரை என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த கடற்கரை ஒரு உப்பங்கழி முகத்துவாரம் வரை நீண்டு செல்கிறது.
இங்கு நீச்சலுக்கு அனுமதியில்லை. ஏனெனில் அபாயகரமான பாறைகள் இங்கு நீருக்கடியில் உள்ளன. துடுப்பு மிதவைப்படகுச்சவாரி இங்கு பிரபலமான பொழுது போக்கு அம்சமாக உள்ளது. இங்குள்ள மலைக்குன்றின் மீது ஏறிப்பார்த்தால் இந்தப்பகுதியின் அழகு கிறங்க வைக்கிறது. மாமரங்கள் மற்றும் முந்திரி மரங்கள் இந்த கடற்கரையை ஒட்டியே வரிசையாக அமைந்துள்ளன.
முதல் முறையாக விஜயம் செய்யும் பயணிகள் இந்த கடற்கரையில் கிடைக்கும் மராத்திய உணவுப்பண்டங்களை சுவைக்கலாம். மேலும் ஒட்டகச்சவாரியும் இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.



Click it and Unblock the Notifications