17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எழில்மிகு அரண்மனையான இது தான் கோண்டலின் பழமையான கட்டடம். இந்த பழமையான மாட மாளிகையில் செதுக்கப்பட்ட வளைவுகள், ஈர்க்கும் வகையில் மேல் மாடங்கள், முற்றங்கள் மற்றும் அழகிய சுழல் படிக்கட்டுகளை காணலாம்.
இது போக இதனுள் ஒரு அழகிய அருங்காட்சியமும் உள்ளது. அரண்மனையின் தர்பாரில் சில அழகிய கலைப்பொருட்கள், உயிரற்ற வன விலங்குகள், கம்பீரமான பர்னிச்சர்கள் ஆகியவை காட்சி தருகின்றன.
அதே போல் இங்குள்ள அருங்காட்சியத்தில் பாகவட்சின்ஜி மகாராஜாவிற்கு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது பரிசுகள் மற்றும் தகவல்கள் அளிக்க பயன்படுத்தப்பட்ட வெள்ளிப் பெட்டிகள் இங்கே உள்ளன.



Click it and Unblock the Notifications