1904 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால், குல்மார்க்கில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இம்மைதானத்தில் முதல் கோல்ஃப் போட்டியானது 1922 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
நாட்டிலேயே மிகவும் அழகான கோல்ஃப் மைதானம் என்று புகழப்பட்ட பசுந்தரையிலான இம்மைதானத்தில் ஆங்கிலேயர்கள் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 2650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோல்ஃப் மைதானம் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கோல்ஃப் மைதானங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.
கோல்ஃப் விளையாட ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகள் ஒரு நாளைக்கான தற்காலிக உறுப்பினர்களாகப் பதிவுசெய்து 18 குழிகளுள்ள இந்த கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மகிழலாம். ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்த கோல்ஃப் மைதானம் நிர்வகிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications