ஹலேபீடுக்கு வருகை தரும் பயணிகள் பஸாதி ஹள்ளி எனப்படும் இந்த ஜைனக்கோயில்களின் தொகுப்பு வளாகத்துக்கு விஜயம் செய்ய வேண்டியது அவசியமாகும். கண்ணாடியை போன்று வழவழப்புடன் காட்சியளிக்கும் தூண்களுக்கும் மூன்று தொகுப்பு கோயில்களுக்கும் இந்த பஸாதி ஹள்ளி பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த மூன்று கோயில்களில் பர்ஷ்வநாதஸ்வாமி கோயில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் 14 அடி உயரமுள்ள கருங்கல் சிலை காணப்படுகிறது. இந்த சிலையின் தலைப்பகுதியில் 7 தலைகளைக் கொண்ட நாகத்தின் சித்தரிப்பு காணப்படுகிறது.இந்த கோயிலின் கதவுகள் மிக நுட்பான அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஹலேபீடு பாணி என்றே அறியப்படும் ஒரு கலையம்சத்தை இவை உள்ளடக்கியுள்ளன.
மேலும் இங்கு பலவித சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் 12 தூண்களும் அமைந்துள்ளன. இந்த தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிற்பமும் தனித்தன்மையாக ஒன்று போல் ஒன்றல்லாமல் அமைந்திருப்பது ஒரு விசேஷம்.இவை தவிர இந்த வளாகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஆதிநாதஸ்வாமி கோயில், கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஷாந்திநாதஸ்வாமி கோயில் ஆகிய இரண்டும் மற்ற சிறப்பான கோயில்களாகும்.
இந்த கோயில்களுக்கு பயணிகள் எந்த நாளிலும் கட்டணம் ஏதுமின்றி விஜயம் செய்து ரசிக்கலாம். மற்றொரு முக்கியமான கோயிலான ஹொய்சளேஷ்வரா கோயில் இந்த கோயில்களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.