இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை விளக்குவதுபோல் இந்த ஹூக்ளி இமாம்பாரா அமைந்துள்ளது. இதன் வாயில் பகுதியில் தேவாலயங்களில் உள்ளது போன்று ஒரு மணிக்கூண்டு கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
1800-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதிக்கு வெகு தூரங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். மசூதியின் உட்புற சுவர்களில் குரான் புனித வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.