இந்தூரில் உள்ள தனித்தன்மை வாய்ந்த கீதா பவன் ஒரு மத வழிபாட்டுத்தலமாகும். இந்த வழிபாட்டுத்தலம் குறிப்பாக எந்த ஒரு மதத்தையோ, இனத்தையோ அல்லது பிரிவையோ சார்ந்தது கிடையாது என்பதே இதன் தனிச்சிறப்பிற்கு காரணம்.
இது மக்களின் இறை நம்பிக்கைக்கான ஒரு கோவிலாக உள்ளது. பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களும் இந்த கோவிலிற்குள் ஒன்று கூடி தத்தமது இறைவனை நோக்கி இங்கு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்த வழிபாட்டுத் தலத்தில் சில மதங்களைச் சார்ந்த கடவுள் சிலைகளும் உள்ளன. இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றின் புராணக் காட்சிகள் இந்த வழிபாட்டுத் தலத்தின் மத்திய கூடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளன.
மதம் தொடர்பான உரையாடல்கள் என்று பொருள்படும் 'பிரவசான்ஸ்' என்ற நிகழ்வு இந்த கோவிலிற்குள் நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவிலின் அழகு மற்றும் தெய்வீகத்தன்மையின் காரணமாக, இது உள்ளூர் மற்றும் வெளியூர்வாசிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இடமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கே நடத்தப்படும் வருடாந்திர நிகழ்ச்சியில், எல்லா விதமான மக்களும் இந்த கோவிலிற்கு வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications