ஜோவாய் நகரத்தின் அம்ராலெம் துணைப் பிரிவில் க்ராங் சூரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவையினங்களில், மிகவும் அழகானதாகவும் மற்றும் தெய்வீக தன்மை உடையதாகவும் க்ராங் சூரி என்ற பறவை கருதப்படுகிறது.
பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் பெரிய பாறைகளை கொண்டிருக்கும் இடம் உங்களை கவிதை எழுதத் தூண்டும்!
இங்கிருந்து கீழாக இறங்கிவரும் பள்ளமான இடத்தில் குளுகுளுவென்று இருக்கும் தண்ணீரில் குளித்து வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். மழை பெய்யும் நாட்களில், தண்ணீர் துளிகள் அடர்த்தியாக விழுந்து கொண்டிருப்பதால், அது மூடுபனி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த இடத்திற்கு எளிதில் வந்து செல்லும் பொருட்டாக மாவட்ட நிர்வாகம் சரளை கற்களால் பாதைகளை அமைத்துள்ளது. மேலும், இயற்கையான தோற்றத்தை உருவாக்கும் பொருட்டாக, சிமெண்ட் பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைத்த பல்வேறு வண்ணங்களாலான கற்களை பயன்படுத்தி பாதைகளை அவர்கள் அமைத்திருக்கிறார்கள்.
தண்ணீர் அபரிமிதமாக இருக்கக்கூடிய மழைக்காலங்களில் இந்த இடத்திற்கு வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications