ராம் நிவாஸ் பாக் எனப்படும் இந்த வனப்பு மிகுந்த பூங்காத்தோட்டம் 19ம் நூற்றாண்டில் ராம் சிங் மஹாராஜாவால் நிறைவேற்றப்பட்ட பஞ்ச நிவாரணத்திட்டங்களில் ஒரு அங்கமாகும்.
இந்த பெரிய பூங்காவில் ஒரு விளையாட்டு வளாகம் மற்றும் விலங்குக்காட்சிசாலை ஆகியவற்றுடன் ஒரு தாவர அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது. இவை தவிர இங்குள்ள ஆல்பர்ட் ஹால் மியூசியமும் ஒரு முக்கிய சுற்றுலாச்சின்னமாக திகழ்கிறது.
வட இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களை சேர்த்து வடிவமைப்பதில் புகழ்பெற்றிருந்த சர் ஸ்விண்டன் ஜேக்கப் எனும் ஆங்கிலேய வல்லுனரால் இந்த ஆல்பர்ட் ஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர் பல ராஜஸ்தானிய மன்னர்களுக்கு அரண்மனைகள் மற்றும் மாளிகைகளை ‘இந்தோ சராசனிக்’ பாணியில் வடிவமைத்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.