சர்கசுலி அல்லது இசார் லாட் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்தக் கோபுரம் மஹாராஜா ஈஷ்வர் சிங் என்பவரால் 18ம் நூற்றாண்டில் ஒரு யுத்த வெற்றியின் ஞாபகச்சின்னமாக கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரு சாதாரண குடியில் பிறந்த பெண்ணை காதலித்த காரணத்துக்காக மக்கள் அவரை வெறுத்தனர் என்பது ஒரு சுவாரசியமான வரலாற்று தகவலாகும். கய்த்தோர் ராஜவம்ச நினைவுமண்டபத்தில் இவரது பெயரோ சின்னமோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.