பிரணமி மதப்பிரிவை சேர்ந்தவர்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக இந்த கிஜாடா கோயில் அமைந்திருக்கின்றது. இந்த வகுப்பினர் எல்லா மதங்களையும் ஒன்றிணைக்கும் நெறியை பின்பற்றுபவர்கள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் ஸ்தலத்தில் 400 வருடங்கள் பழமையான இரண்டு தல விருட்சங்கள் கோயிலின் முக்கிய அங்கமாக வீற்றிருக்கின்றன.
இந்த கோயிலின் குரு மற்றும் பிரணமி மார்க்க உறுப்பினர்கள் அனைவரும் சமுதாய முன்னேற்றம் சார்ந்த சேவைகளில் தங்களை முற்றாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் என்பதற்கான உண்மையான நோக்குடன் இயங்கும் கிஜாடா கோயில் இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அற்புத தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
சுயநலத்துக்காக சடங்கு முறைகளில் ஈடுபட கூட்டமாக குவிவது மற்றும் தீவிர மதப்பற்றோடு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற சிக்கல்களுக்கு மாற்றாக, எல்லா மதமும் நோக்கத்தில் ஒன்றே எனும் உச்சமான தத்துவத்தையும், கோயில் என்பது மனத்தூய்மைக்காகவே எனும் நிதர்சனத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கிஜாடா கோயில் அற்புதமான ஆன்மீகத்தலமாகும்.



Click it and Unblock the Notifications