ஜௌன்பூர் நகரத்திற்கு வடகிழக்காக 2.2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அடாலா மசூதியானது ஜௌன்பூர் நகரத்தை ஆண்ட சுல்தான் இப்ராஹீம் ஷார்க்கி என்பவரால் 1408ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இதற்கான அஸ்திவாரம் 1377ம் ஆண்டிலேயே டெல்லி சுல்தான் மூன்றாம் ஃபிரோஸ்கான் துக்ளக் என்பவரின் ஆட்சியின்போதே நாட்டப்பட்டுவிட்டது.
இந்த இடத்தில் அமைந்திருந்த அடாலா தேவி கோயில் என்ற ஹிந்து கோயில் அழிக்கப்பட்டு அதே இடத்தில் அதே கட்டுமானப்பொருட்களை கொண்டு அதே பெயரில் இந்த மசூதி உருவாகியிருக்கிறது. இன்றும் பழைய ஹிந்து கோயிலின் அசலான அம்சங்களை இந்த மசூதியில் காணலாம்.
இந்த மசூதியின் வடிவமைப்பு, மாடங்கள், சாரங்கள், தூண்கள் மற்றும் சுவர்ப்பகுதிகள் போன்றவை சுல்தான் முஹமத் ஷா துக்ளக் மற்றும் ஃபிரோஸ் ஷா துக்ளக் போன்ற மன்னர்கள் காலத்திய கட்டிடக்கலை அம்சங்கள் காணப்படுகின்றன. இது பேஹம்பூர் மசூதியைப்போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
விதான வாயில் அலங்கார முகப்போடு கூடிய வாசல் வழியாக இந்த மசூதியின் உள்ளே நுழையலாம். ஒரு விசாலமான தொழுகைக்கூடத்தை இந்த மசூதி கொண்டுள்ளது.
மூன்று வெவ்வேறு அளவிலான குமிழ் கோபுரங்கள் இதன் கூரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அடாலா மசூதி ஜௌன்பூர் நகரத்தின் முக்கியமான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக வீற்றிருக்கிறது.