புராண நகரமான ஜின்ட், பழங்காலத்தைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் கிராமங்களைப் பற்றிய அளப்பறிய தகவல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களின் பெயர்கள் மற்றும அவற்றின் தோற்றங்கள் புராணங்களிலும் மற்றும் பழங்கால எழுத்துகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜின்ட் நகரத்தின் நார்வானா தாலுகாவின் ஒரு பகுதியாக ஹன்ஸ்டேகர் கிராமம் உள்ளது.
பிரம்ம தேவர், கர்டாம் முனிவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது அன்னப் பறவை (Hans)-ல் இந்த கிராமத்திற்கு வந்ததால் இந்த கிராமத்திற்கு அதன் பெயரே சூட்டப்பட்டது. கர்டாம் முனிவரின் பிறப்பிடமான இங்கே, அவர் சில ஆண்டுகள் தனது தியானங்களை செய்ததாக நம்பப்படுகிறது.
இந்த கிராமம் வழியாக பாய்ந்த சென்ற சரஸ்வதி நதியில் பாண்டவர்கள் அவர்களுடைய மூதாதையர்களுக்கு பின்டம் வைக்கும் வைபவங்களை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த கிராமத்தில் சிவ பெருமானுக்கான கோவில் மற்றும் பிந்துசாரர் தீர்த்தம் ஆகிய இடங்களும் உள்ளன.