ஸ்ரீ தீர்ததம் என்ற புனித தலத்தில் சாலகிராமா என்ற கருப்பு வண்ணத்திலான மதிப்புமிக்க கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. உண்மையான சாலகிராமா கற்கள் பாசில் படிவுகளாலான பாறைகளாகும்.
இவை நேபாளத்திலுள்ள கண்டகி நதியிலும் மற்றும் இமய மலையின் சில பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கின்றன. இவை கோள வடிவிலும், வட்டினைப் போலவும் உள்ளன.
சாலகிராமா கற்கள் புனிதமான கற்களாக கருதப்படுவதால், அவை சிலைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கிருஷ்ண பகவான் துஷ்ட சக்திகளை கொல்வதற்காக பயன்படுத்திய சுதர்சன சக்கரம் போலவே இவை தோற்றம் பெற்றுள்ளன.
எனவே சாலகிராமா கற்கள் மகா விஷ்ணுவை பிரதிபலிப்பதாக உள்ளன. சாலகிராமாவை வணங்குவதன் மூலம் மகா விஷ்ணு ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஞானம் மற்றும் மகிழ்ச்சியை வழங்குவர் என்று நம்பப்படுகிறது.
இந்த வழிபாட்டில், கடவுளின் சிலை மீது தண்ணீரை ஊற்றி, அதில் வழியும் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, குடிப்பார்கள். இந்த தண்ணீர் தெய்வீக சக்திகள் மிக்க புனித நீராக கருதப்படும்.
ஜின்ட் மாவட்டத்தின் நார்வானா தாலுகாவில் உள்ள சிம்லா என்ற கிராமத்தில் ஸ்ரீ தீர்த்தம் உள்ளது. இது வழிபாட்டிற்கு ஏற்ற மிகவும் உயர்ந்த தலமாக உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் நீராடுவதன் மூலம் அளவில்லாத அமைதியையும், மகிழ்ச்சியையும் பக்தர்கள் பெறுவார்கள்.