மார்வார் மன்னர்களின் முற்காலத்திய தலைநகரான மந்தோர் எனுமிடத்தில் இந்த மந்தோர் பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. பாறையால் உருவாக்கப்பட்ட ஒரு பீட அமைப்புக்கு இது பிரசித்தமாக அறியப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாகவும் இது திகழ்கிறது.
இந்த இடத்தில் பயணிகள் ஜோத்பூர் மன்னர்களின் சமாதி நினைவுச்சின்னங்களைக் காணலாம். இவை வழக்கமான ‘சாத்ரி’ பாணியில் கட்டப்படாமல் ஹிந்துக்கோயில்களின் வடிவை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘தேவல்’ என்ற இந்த நினைவுச்சின்னங்கள் நான்கு அடுக்குகளைக்கொண்டதாக அழகிய கூம்பு வடிவக்கூரை அமைப்பு மற்றும் சிவப்பு மணற்கற்களால் ஆன தூண்கள் போன்ற கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
இவற்றில் மஹாராஜா அஜித் சிங்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘தேவல்’ மிக அற்புதமான வடிவமைப்புடன் அருகில் ஒரு அழகிய நந்தவனத்துடன் அமைந்துள்ளது. மந்தோர் தோட்டத்துக்கு அருகிலேயே பிரசித்தமான முப்பது கோடி கடவுள் கோயில் மற்றும் மாவீரர் மாளிகை இரண்டும் அமைந்துள்ளன.
முப்பது கோடி கடவுள் கோயிலானது பல ஹிந்து தெய்வங்களின் வண்ணமயமான சித்திரங்களைக் கொண்டுள்ளது. மாவீரர் மாளிகை ராஜபுத்திர வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இங்கு பாறைகளில் வடிக்கப்பட்டு வண்ணமும் தீட்டப்பட்டுள்ள வீரர்களின் சிலைகளைக் காணலாம். அக்கால மந்தோர் நகரின் மிச்ச சிதிலங்களை இந்தத் தோட்டத்திலுள்ள மலை உச்சியிலிருந்து பார்க்கலாம். இந்த மலைக்கருகிலேயே ராணிகளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள நினைவு மாடம் ஒன்றும் உள்ளது.