ஜோர்கட்டின் நா-அலி பகுதிக்கு அருகில் உள்ள பங்கல் புக்ரி ஒரு புகழ் பெற்ற நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் கட்டப் பட்ட நேரத்தில் நடந்த ஒரு ஆர்வமூட்டக் கூடிய நிகழ்வு இன்றும் கூட ஜோர்கட் மக்களின் நினைவில் உள்ளது.
1739-ம் ஆண்டில் அஹோம் ஆளுநராக இருந்த படான் பார்புகான் என்பவரை ருப்சிங் பங்கால் என்பவர் கொன்று விட்டார். கொடுங்கோலாட்சி நடத்தி வந்த பார்புகான் பர்மிய மற்றும் அஸ்ஸாமிய போர்வீரர்களை கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனைக் கண்ட ருப்சிங் பங்கால், சக வருடத்தின் ஸ்ரவண மாதத்தில், பார்புகான் குளிக்க செல்லும் போது அவரை கொன்று விட்டார். இந்த வீரச் செயலுக்காக பங்காலுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில், அவர் இந்த பாங்கால் புக்ரியை உருவாக்கினார்.
எனினும், ஒருவரைக் கொன்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் உருவாக்கப்பட்டதால் இந்த குளத்தில் தண்ணீர் யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் துரதிஷ்டம் பின்தொடரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த குளம் உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்டாலும், புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications