அஸ்ஸாம் சாகித்ய சபாவின் தலைமையகமாக சந்திரகாந்தா ஹான்டிக் பவன் விளங்குகிறது. 1926-ம் ஆண்டு ராதாகாந்தா ஹான்டிக்கின் நினைவாக உருவாக்க்கப்பட்ட இந்த அலுவலகம் அவராலேயே நன்கொடையாக வழங்கப்பட்ட இடமாகும்.
ஜோர்கட் நகரத்தின் மேம்பட்ட இலக்கிய அறிவின் அடையாளமாக சந்திரகாந்தா ஹான்டிக் பவன் உள்ளது. அஸ்ஸாம் சாகித்ய சபாவின் தலைமையிடமாக இருப்பதுடன், அஸ்ஸாமிய இலக்கியங்களின் வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றி வந்த இடமாகவும் சந்திரகாந்தா ஹான்டிக் பவன் விளங்கி வருகிறது.
இந்த இடத்துடன் பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர். திம்பேஸ்வர் நியோக், சந்திரஹார் பருவா மற்றும் மித்ராதேவ் மகந்தா ஆகியோர் இந்த சபாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவார்.
சந்திரகாந்தா ஹான்டிக் பவனுக்கு ஒரு முறை வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மாநிலத்தின் முழுமையான இலக்கிய மேம்பாட்டின் தன்மையை புரிந்து கொள்வதுடன், ஜோர்கட்டின் கலாச்சாரத்தையும் நன்றாக உணர முடியும். சந்திரகாந்தா ஹான்டிக் பவனுக்கு உள்ளூர் பேருந்துகள் மற்றும் வாடகை வண்டிகளில் எளிதில் செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications