நந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமாகும். சுமார் 630 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த தேசியப் பூங்கா, நாட்டின் இரண்டாவது பெரிய மலைத்தொடரான நந்தா தேவி மலைகளினால் சூழப்பட்டுள்ளது.
இப்பூங்கா, 1988 ஆம் வருடம் யுனைட்டட் நேஷன்ஸ் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இப்பூங்கா மேற்குப்புற இமாலய என்டமிக் பறவைப் பகுதியின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது. நந்தா தேவி தேசியப் பூங்காவில், பனிச்சிறுத்தை, இமாலயன் கறுப்புக்கரடி, செரோவ் வகை ஆடுகள், பழுப்பு நிற கரடி, ரூபி த்ரோட், பாரல் வகை ஆடுகள், கரடிக் குரங்குகள், க்ரோஸ்பீக் வகை பறவைகள், இமாலயன் கஸ்தூரி மான் மற்றும் இமாலயன் வரையாடுகள் போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகி