ஒரு ஓவியத்தை போல் காட்சி அளிக்கும் அழகிய மலை தான் குடஹண்டி. காலாஹண்டியில் உள்ள மூன்று மலைகள் ஒன்று சேர்ந்தது தான் இந்த தலம். தொல்பழங்காலத்திய மலை இது என நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்கள் இங்கே கிடைத்திருக்கின்றன.
இங்குள்ள குகைகளில் பல ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் போது செதுக்கப்பட்டதாகும். இங்குள்ள அனைத்து குகைகளும் ஏறத்தாள ஒரே அளவில் தான் உள்ளன.
ஆனால் வடக்கு திசையில் இருக்கும் ஒரு குகை மட்டும் அளவில் சற்று வேறுபட்டு இருக்கிறது. குகைகளின் வாசலில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஓவியத்தின் அழகில் நாம் மயங்கப்போவது உறுதி.
வடக்கு மற்றும் தெற்கு மலைகள் இணையும் இடத்தில் பசுமையான தாவரங்கள் நிறைந்த ஒரு அழகிய பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது குடஹண்டி மலைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இருக்கிறது.
இந்த மலையில் பெஹெரா என்ற சிறிய நதியும் ஓடுகிறது. இங்கு எஞ்சியிருக்கும் ஒரு பழமையான அணை பீமாவால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த இடம் உள்ளூர்வாசிகளுக்கும் சரி சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி, குளிர் காலத்தில் நேரத்தை செலவிட சிறந்த இடமாக விளங்குகிறது.