காளஹஸ்தி நகரத்தில் ஷாப்பிங் செய்வது ஒரு ஆனந்தமான அனுபவம் என்பதால், பக்தர்களும் பயணிகளும் தவறாமல் இதற்கும் நேரம் ஒதுக்கலாம். கலம்காரி எனப்படும் ஓவிய பாணிக்கு இந்த காளஹஸ்தி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்படுவது இவற்றின் தனித்தன்மையான சிறப்பம்சமாகும். இந்த இயற்கை வண்ணச்சாயங்கள் தாவரங்கள் மற்றும் காய்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், சூழல் மாசுபடா தயாரிப்புமுறையை கொண்டுள்ளன.
செயற்கை வண்ணங்களுக்கு எந்த விதத்திலும் குறையாத பளிச்சென்ற பிரகாசத்துடன் இந்த இயற்கை வண்ணச்சாயங்கள் ஒளிர்வது வியப்பூட்டும் அதிசயமாகும். காளஹஸ்தி நகரத்தில் ஸ்ரீ ராம் நகர் காலனி மற்றும் பி.பி அக்ரஹாரம் போன்ற இடங்களில் இது போன்ற கலம்காரி ஓவியங்களை பயணிகள் வாங்கலாம்.
இது மட்டுமல்லாமல், முக்கிய சிவத்திருத்தலம் என்பதால் சிவபெருமான் சம்பந்தப்பட்ட அனேக பூஜைப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை இங்கு ஏராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.
உங்கள் வீட்டு பூஜையறையில் வைப்பதற்கும் ஆன்மீக சடங்குகளின்போது பயன்படுத்துவதற்கும் ஏராளமான கைவினைப்பொருட்கள் மற்றும் ஆன்மீகப்பொருட்களை இந்த நகரிலிருந்து வாங்கிச்செல்லலாம்.