ஸ்ரீ துர்கா கோயில் எனப்படும் இந்த ஆலயம் சக்தியின் வடிவமான துர்க்கையம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடந்தோறும் ஈர்க்கிறது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்காக 800 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. அகலமான படிக்கட்டுகள் மூலமாக இந்த கோயிலுக்கு ஏறிச்செல்ல வேண்டியுள்ளது.
துர்க்கா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள சன்னதி மற்ற காளஹஸ்தி கோயில்களோடு ஒப்பிடும்போது மிகச்சிறியது என்றாலும் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகளால் மிகவும் விரும்பி தரிசிக்கப்படுகிறது.
காளஹஸ்திக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த துர்க்கையம்மன் கோயிலுக்கு கடைசியாக விஜயம் செய்து தங்கள் யாத்திரையை முடித்துக்கொள்கின்றனர். தெய்விகச்சூழலும் அமைதியும் நிறைந்திருக்கும் இந்த மலைக்கோயில் காந்தம் போன்று பக்தர்களை கவர்ந்திழுக்கிறது என்றே சொல்லலாம்.
அது மட்டுமல்லாமல் இந்த மலைக்கோயில் உச்சியிலிருந்து சுற்றியிருக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் நகரத்தை பார்க்க முடிவது மற்றொரு சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications