காளஹஸ்தியில் உள்ள இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் முருகக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிகச்சுலபமாக பக்தர்கள் சென்றடையலாம்.
ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை திருவிழா இந்த கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எட்டு நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவின்போது இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அச்சமயம் இக்கோயில் வண்ணவிளக்குகளாலும் மலர்களும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிப்பது மட்டுமல்லாமல் திருவிழாவின் கடைசி நாளில் முருகக்கடவுள் தன் துணைவியராண வள்ளி, தேவானையுடன் தேர் பவனி வரும் உற்சவமும் நடத்தப்படுகிறது.
உள்ளூர் முருக பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மத்தியில் இந்த ஆடிக்கிருத்திகை மிகப்பிரசித்தமாக அறியப்படுவதால் ஏராளமான பக்தர் கூட்டத்தை இந்த திருவிழாக்காலத்தின்போது காளஹஸ்தி நகரத்தில் பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications