பியோ அல்லது ரெக்காங் பியோ என்றழைக்கப்படும் இந்த இடம்தான் கின்னார் மாவட்டத்தின் தலைநகரமாகும். சிம்லாவிலிருந்து 260கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 2290மீ உயரத்தில் அமைந்துள்ளது.
வரலாற்று சான்றுகளின் படி, ரெக்காங் பியோ நகரம் கானாவ்ர்ரா அல்லது கின்னாவ்ரா என்ற பெயரில் முந்தைய காலங்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டம் திபெத்தைச் சேர்ந்த குகே அரசாங்கத்தால் 9வது மற்றும் 12வது நூற்றாண்டுகளில் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. பிறகு இந்த இடம் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டதால் சாட் குண்ட் என்றும் அழைக்கப்பட்டது. (ஒன்றாக கருதப்பட்டது)
மாநில அரசாங்கம் நடத்தும் முக்கியமான இந்திய திருவிழாவான புத்த மஹோத்சவம் இந்த இடத்தில் தான் நடத்தப்படுகிறது. இந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கின்னார் கைலாஷ் மலையின் கண்கவரும் காட்சியை காண முடியும். சாகசத்தை விரும்புவர்கள் ரெக்காங் பியோவில் இருந்து கின்னார் நகரை 4 முதல் 5 நாட்கள் மலையேற்றம் செய்து அடையலாம்.



Click it and Unblock the Notifications