கல்பெட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காரப்புழா அணை இந்தியாவின் மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அணை காரப்புழா ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது.
காரப்புழா அணை பல்வேறு ஏரிகளின் கதம்பமாக காட்சியளிப்பதோடு, ஒவ்வொரு ஏரிகளின் மத்தியிலும் பசுமையான மரங்கள் அடர்ந்த மலைகள் பயணிகளுக்கு மிகச் சிறந்த காட்சி விருந்தாக அமைந்திருக்கின்றன. அதோடு இந்தப் பகுதி ஏராளமான நீர் வாழ் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்து வருகிறது.