துவாரகை நகரத்தின் தலைவர் அல்லது அரசராக கருதப்படும் கிருஷ்ண பகவானை குறிக்கும் சொல்லாகவே துவாரகாதீஷ் என்ற வார்த்தை உள்ளது. எனவே, துவாரகாதீஷ் கோவில் கிருஷ்ணருக்காக அமைக்கப் பட்டுள்ளது. இது கான்பூரில் உள்ள கம்லா கோபுரத்திற்கு அருகில் உள்ளது.
இந்து மத நாட்காட்டியின் படி, ஷ்ரவண் திருவிழா ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்படும். வட இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள் இந்த காலகட்டத்தை வருடத்தின் மிகவும் புனிதமான மற்றும் சாதகமான நாட்களாக கருதுவார்கள்.
கிருஷ்ண பகவான் மற்றும் அவருடைய துணைவியார் இராதா ஆகியோரின் துணையுடன் இந்த திருவிழாவைக் கொண்டாடுவதைத் தவிர சிறந்த வழி எதுவும் இல்லை!
அந்நாட்களில் இந்த இரு கடவுள்களின் சிலைகளுக்கும் வண்ணமயமான ஆடைகளை அணிவித்து, அவற்றை ஊஞ்சலில் வைத்து விட்டு, அந்த ஊஞ்சல் பிணைக்கப் பட்டுள்ள மெல்லிய கயிற்றை மெதுவாக, மரியாதையுடன் ஆட்டுவித்து மகிழ்வது வழக்கம்.
இந்த சடங்குகளை செய்யும் போது, அவர்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவது வழக்கம். கான்பூர் மக்கள் இந்த தெய்வீக தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து, மத ஒழுக்கத்துடன் சடங்குகளை செய்யும் ஜுலா என்ற இடம் துவாரகாதீஷ் கோவிலில் மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications