மோடி ஜீல் என்றால் முத்து ஏரி என்று பொருளாகும். கான்பூரில் உள்ள ஸ்வரூப் நகர் என்ற பகுதியில் இந்த ஏரி உள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் குடிநீரை தேக்கி வைக்கும் பொருட்டாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
பின்னர், இங்கிருக்கும் சிறுவர் பூங்கா மற்றும் கலைநயத்துடன் நிலஅமைப்புகள் வடிவமைக்கப் பட்டுள்ள தோட்டங்கள் ஆகியவைகளுக்காக இந்நகரத்தின் கவர்ச்சியான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்த செவ்வக வடிவ ஏரியின் ஒரு பகுதியில் லாலா லஜபதி ராய் மருத்துவமனை மற்றும் நகராண்மை குழுவின் முக்கியமான கட்டிடங்கள் மற்றும் கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பூக்களுடனும், மெதுவாக நீந்திச் செல்லும் வாத்துகளுடனும் இருக்கும் மோடி ஜீல் கான்பூர் நகரத்தின் முக்கியமான ஓய்விடங்களில் ஒன்றாகும்.
குழந்தைகள் கிரிக்கெட் மற்றும் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து செல்வதற்காகவே கட்டப்பட்டிருக்கும் பாதையில் தங்களுடைய நடை பயணத்தை செய்து கொண்டிருப்பார்கள்.



Click it and Unblock the Notifications