கணேஷ் வித்யார்த்தி உத்யான் என்றும் அழைக்கப்படும் பூல் பாக், கான்பூர் மத்திய இரயில் நிலையம், எல்.ஐ.சி கட்டிடம் மற்றும் நானா பூங்கா ஆகிய இடங்களுக்கு அருகில், நகரின் மத்தியில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் விக்டோரியா மகாராணி தோட்டம் என்ற பெயரில் இநத பூங்கா அழைக்கப்பட்டு வந்தது.
இந்த பூங்கா பல்வேறு பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடமாகவும், மாபெரும் தலைவர்கள் மற்றும் பெரிய பேச்சாளர்களான மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ராம் மனோகர் லோஹியா ஆகியவர்கள் பேசிய இடமாகவும் இருந்துள்ளது.
பூல் பாக்கில் தான் கான்பூரின் புகழ் பெற்ற கான்பூர் சாங்ராஹாலயா மற்றும் கான்பூர் யூனியன் கிளப் ஆகியவை உள்ளன. சாங்ராஹாலயா தான் கான்பூரின் அலுவல் ரீதியான அருங்காட்சியகமாக விளங்கி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், இந்த பூங்கா சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காகவும் மற்றும் பசுமையான இடங்களைப் பெற்றுள்ளதற்காகவும் பெருமை பெற்றிருந்தது.
எனினும், தற்போது அரசியல் ஊர்வலங்களுக்காக இந்த பூங்கா பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இதன் பசுமை பெருமளவு காணாமல் போய் விட்டது. எனினும், இதன் வரலாற்றுப் பின்னணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications