குமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (அர்த்தம்: கன்னி) + குமரி (அர்த்தம்: பெண்) என்பதை குறிக்கும். புராண கதைகளின் படி சிவனுக்கும் கன்னியாகுமரிக்கும் (பார்வதி தேவி) நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை.
ஆதலால் பார்வதி தேவி தான் ஒரு கன்னி தேவதையாக விளங்க முடிவு செய்து விட்டதாக கூறுகிறது புராணம். மேலும் திருமணத்திற்காக சேகரித்த தானியங்கள் அனைத்தும் சமைக்கப்படாமல் போனதால், அவைகள் கல்லாக மாறிப்போனதாகவும் கதைகள் உண்டு.
எனவே இன்றும், தானியங்களை போல் இருக்கும் கற்களை, நடக்காத திருமணத்தின் அடையாளமாக எண்ணி சுற்றுலா பயணிகள் வாங்கிச்செல்வர்.
இக்கோயில் 18-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் விஜயநகர், சோழர்கள் மற்றும் நாயகர்களால் புதுபிக்கப்ட்டது.
மேலும் இக்கோயிலில் 18-ஆம் நூற்றாண்டின் ஒரு புனித ஸ்தலமான பார்வதி தேவியின் கால் தடங்களை இன்றும் சுற்றுலா பயணிகள் கண்டு வணங்கலாம்.