ராமகிருஷ்ண பரமஹம்சாவின் பரம பக்தரான விவேகானந்தரின் நினைவாக உள்ள ஸ்தலமே விவேகானந்தர் பாறை / நினைவு மண்டபம். ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் 1970-ல் நீலம் மற்றும் சிவப்பு கிராநைட் கற்களால் கட்டப்பட்டது. இது கடலுக்கு நடுவில் ஒரு பாறை திட்டின் மேல், கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நினைவு மண்டபம் இரண்டு பாறைகளுக்கு மேல் கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது.
விவேகானந்தர் கன்னியாகுமரி வந்த பொழுது கடலில் நீந்திச் சென்று இப்பாறையில் அமர்ந்து இரவு முழுவதும் தீவிர தியானத்தில் இருந்ததாக கூறப்படுவது உண்டு. அதன் பிறகே இந்நாட்டிற்கு சேவை செய்ய அவர் தன்னை அற்பணிக்கவும், வேதாந்தங்களை உலகம் முழுவதும் பரப்பவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின் 1983-ல் சிகாகோவில் நடைப்பெற்ற உலக மத மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். விவேகானந்தர் ஸ்ரீபடா பாறைக்கு 1982 டிசம்பர் 24, 25, 26-ல் தியானம் செய்யவும் அறிவொளி பெறவும் வந்ததை நினைவு கூறவே விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவப்பட்டது.
நினைவு மண்டபம் உள்ளே இருக்கும் விவேகானந்தரின் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இங்கே இருப்பது இரண்டு மண்டபம், ஸ்ரீபடா மண்டபம் மற்றும் விவேகானந்தர் மண்டபம்.
ஸ்ரீபடா மண்டபம் ஸ்ரீபடா பாறையின் மேல் உள்ளது. இது கன்னியாகுமரி கடவுள் அருளிய புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது - சபா மண்டபம், தியான மண்டபம், முன் நுழைவாயில் மற்றும் முக மண்டபம். தியான மண்டபம் சுற்றுலாப் பயணிகள் தியானம் செய்யப் பயன்படுத்தப்டுவது.