வட்டக்கோட்டை கன்னியாகுமரியிலிரிந்து 6 km தொலைவில், வடகிழக்கு திசை நோக்கி உள்ளது. இது தோரயாமாக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய் என்ற டச்சுக் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டது.
கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில், பல ஓய்வறைகள், காவல் கோபுரங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளும் உள்ளன. இக்கோட்டையின் உட்புறச் சுவர்களில் காணப்படும், செதுக்கிய மீன்களின் சித்திரங்கள், அவை பாண்டியர்களின் சின்னம் என்பதை குறிக்கின்றன.
தொல்பொருள் ஆராய்சியாளர்களின் ஆய்வின்படி, இந்தக் கோட்டை முன்னாட்களில் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்லப்படுகிறது.
முன்னாட்களில், இக்கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால் பத்மநாபபுரம் அரண்மனை மிக தெளிவாக தெரியும். கோட்டையிலிருந்து அரண்மனையை அடைய 1.2 மீட்டர் அகலத்தில் ஒரு சுரங்கமும் உண்டு. ஆனால் இப்போது அது மூடப்பட்டு விட்டது.
கோட்டையின் மேல் பகுதியில் இருக்கும் அணிவகுப்பு மைதானத்திலிருந்து பார்த்தால் கடலின் கணநேர காட்சியை காணலாம். அணிவகுப்பு மைதானத்தின் ஒரு பகுதியிலருந்து பார்த்தால் வங்காள விரிகுடாவை கண்டு ரசிக்கலாம். மைதானத்தின் மறுபக்கத்திலிருந்து பார்த்தால், தெளிந்தமைதியான அரபிக்கடலை கண்டு களிக்கலாம்.