பிரன்மலை சேக் ஒளியுள்ள தர்கா, மத முக்கியத்துவம் கொண்ட, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். இது, காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், மத வேறுபாடுகளின்றி, அனைத்து மத சுற்றுலாப் பயணிகளும், இத்தர்காவிற்கு வருகின்றனர். இங்கு வந்து வழிபடுவோரின் பிரார்த்தனைகள் யாவும் கட்டாயம் மெய்ப்படும் என்று நம்பப்படுகிறது. நிறையப் பேர் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியபின், இங்கு நன்றி செலுத்த வருகிறார்கள்.
இந்த தர்கா அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வந்து பிரார்த்திப்போரின் அனைத்து வகையான ஆசைகளும் நிறைவேற்றப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, நல்ல மண வாழ்க்கை, மற்றும் வாழ்வின் தீய சக்திகளை விரட்டியடித்தல், போன்ற எவ்வகை பிரார்த்தனைக்கும் பலன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு வகை நோய்களினால் அவதிப்படுவோர் இங்கு வந்து வழிபட்டால், அதிலிருந்து அவர்களுக்கு கட்டாயம் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தர்காவுக்குச் சென்றால், ஏராள்மானோர், இங்கு பிரார்த்தித்ததன் மூலம் நல்லதிர்ஷ்டமும், நல்ல உடல் நலமும் கிடைக்கப்பெற்ற உண்மைக் கதைகள் பலவற்றைக் கேட்டு அறியலாம்.