கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கு அருகில், அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இவ்வூரின் வீடுகள் கட்டப்பட்டுள்ள விதம் மற்றும் இங்கு கிடைக்கும் உணவு வகைகள், இவ்வூரின் தனிச்சிறப்புகளாகும். கானாடுகாத்தானிலுள்ள வீடுகள் மிகப் பெரியவையாகவும், செட்டிநாடு பாணியில் கட்டப்பட்டவையாகவும் விளங்குகின்றன.
பிரதானக் கதவுகள் மற்றும் நுழைவு வாயில்கள், கம்பீரமாகவும், சிறப்பான வேலைப்பாடுகளுடன், இந்துக் கோயில்களின் நுழைவு வாயில்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்துள்ளன.
இங்குள்ள சமையல் கலை, நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகை வகைகளை உபயோகப்படுத்தும், அசலான செட்டிநாட்டு பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் பலகாரங்களை ருசிப்பதற்கென்றே, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
மழை நீர் சேகரிப்புக்காக, வலை மூடியைக் கொண்டு மூடப்பட்ட குழிகள், கானாடுகாத்தான் தெருக்களில் அதிகமாகக் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாகும்.
இந்நகரில், தண்ணீர் சுத்திகரிப்புக்கு, சிறப்பான தொழில்நுட்பங்களைக் கொண்டு கழிவு நீரையும் உபயோகிப்பதற்கு ஏற்றவாறு சுத்திகரிக்கின்றனர். நாட்டிலுள்ள அனைத்து நகரங்களும், தண்ணீரை எவ்வாறு சேமிக்கலாம் என்று கானாடுகாத்தான் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.