சிவகங்கை மாவட்டத்தின் கண்டனூரில் அமைந்துள்ள இக்கோயில், காரைக்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரு ஊர்களுக்கும் இடையே ஏராளமான பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
கண்டனூர் சிவன் கோயில், சிவபெருமானுக்கும் அவரது துணைவியான பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோயிலுக்கு, கண்டனூர் மக்கள் அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
இம்மக்கள், தங்கள் வாழ்வில் நடைபெறும் திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள் அனைத்தையும், இக்கோயிலிருந்து ஊர்வலம் வர செய்து, அதன் பின் தான் ஆரம்பிக்கிறார்கள். இக்கிராமத்தை விட்டு வெளியேறுவோர், முதலில், இங்கு வந்து வழிபாடு செய்து, அதன் பின் தான் பேருந்திலோ, இரயிலிலோ ஏறுகிறார்கள்.
இக்கோயில், திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், இது இங்கு வருவோர்க்கு, மன அமைதியையும், சாந்தியையும் தரக்கூடியதாக உள்ளது. இங்கு வரும் பலரும் சில மணி நேரங்களை, கடவுளுடன் தனிமையில் கழிக்கும் எண்ணத்திலேயே இங்கு வருகின்றனர். இக்கோயிலின் புனிதமான மற்றும் அமைதியான சூழ்நிலை, இங்கு தியானம் செய்ய விரும்பி வருவோர்க்கு ஏதுவாக உள்ளது.