கரவ்ளி நகரத்திலிருந்து 81கி.மீ தூரத்தில் காளிசில் ஆற்றங்கரையில் காய்லா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த ஹிந்துக்கோயில் காளிதேவிக்காக எழுப்பப்பட்டுள்ளது. இது 1100 ஆண்டில் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
இந்த கோயிலில் தினமும் இரவு 9 மணிக்கு பகத் ஜி என்பவரால் நடத்தப்படும் ஜக்ரான் பூஜை பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. சைத்ரா நவராத்திரி உற்சவத்தின்போது ஏராளமான பக்தர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு பகுதி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். இதற்கு அருகிலேயே ஒரு பைரோன் கோயில் மற்றும் ஒரு ஹனுமான் கோயில் ஆகியவையும் அமைந்துள்ளன.