ராஜஸ்தான் மாநிலத்தில் கரவ்ளி நகரத்தில் உள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை 14ம் நூற்றாண்டில் ராஜ குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கிளாசிக் ஓவியங்கள், கல் சிற்ப வடிப்புகள், கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஜாலி சரிகை வேலைப்பாடுகளுக்கு இது புகழ்பெற்று விளங்குகிறது. 600 வருடங்களுக்கு முந்தைய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் தர்பார் மண்டபத்தில் அரண்மனையின் பல பழைய படங்களும் காணப்படுகின்றன.
1938 ம் ஆண்டு வரை இந்த அரண்மனை ராஜ குடும்பத்தாரின் வசிப்பிடமாகவே பயன்பட்டுள்ளது. இருப்பினும், பன்வார் விலாஸ் அரண்மனை கட்டப்பட்ட பிறகு ராஜ குடும்பத்தார் அங்கு குடிபெயர்ந்துள்ளனர்.
சிட்டி பேலஸ் அரண்மனை 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் நாம் தற்சமயம் பார்க்கும் அரண்மனையில் பின்னாளில் சேர்க்கப்பட்ட சுவரோவியங்கள் மற்றும் ஸ்டுக்கோ எனப்படும் அலங்கார வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.