தர்க்கா எனும் பாரசீகச்சொல் சமாதி ஒன்றின் மீது அமைக்கப்படும் வழிபாட்டு சன்னதியை குறிக்கிறது. பெரும்பாலும் முஸ்லிம் சூஃபி ஞானிகளின் சமாதிகள் இவ்வாறு தர்க்காக்கள் எனும் பெயரில் வழிபாட்டுத்தலங்களாக மாற்றப்படும்.
இந்த சூஃபி ஞானிகளை தர்வேஷ் எனும் முர்ஷித் என்றும் அழைப்பதுண்டு. தர்வேஷ் எனும் சொல் சந்நியாசி எனும் பொருளையும், முர்ஷித் என்பது ஆன்மீக குரு எனும் பொருளை உணர்த்துகின்றன.
இது போன்ற முக்கியமான முஸ்லிம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது ஒரு ஆன்மீக சடங்காக இருந்துவருகிறது. பொதுவாக ஒரு தர்க்கா வளாகத்தின் உள்ளே தொழுகைக்கான மசூதி, மதரஸா எனும் மதப்பள்ளி, மௌல்விகள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் தங்குமிடம், மருத்துவ அறை, சமூக சேவைக்கான அறைகள் போன்றவை அமைந்திருக்கும்.
மறைந்து போன சூஃபி ஞானிகளின் ஆவி இந்த தர்க்கா வளாகங்களில் உறைந்து வழிகாட்டுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மேலும் அல்லா மற்றும் சூபி ஞானிகளை துதித்து ஓதப்படும் கவாலி மற்றும் கிஃபி இசை நிகழ்ச்சிகளும் இந்த தர்க்காக்களில் நிகழ்த்தப்படுகின்றன.
நுஷ்ரத் ஃபதேஹ் அலி கான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அபிதா பர்வீன் போன்றோர் முக்கியமான சூஃபி இசைக்கலைஞர்கள் ஆவர்.
இதுபோன்ற எல்லா அம்சங்களையும் வாய்க்கப்பெற்ற ஒரு தர்க்காவான தர்க்கா நூரி கர்ணால்-குஞ்ச்புரா சாலையில் நேவால் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஹஸ்ரத் சூஃபி ஷா அலாமா நூர் மொஹிதின் எனும் டெல்லியை சேர்ந்த சூஃபி ஞானியின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.