கோஷித் ராம் விஹார் எனும் இந்த புத்த மடாலயம் புத்த ஆகம நூல்களில் வெகு உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது புத்த யாத்ரீகர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.
புத்தர் காலத்திலேயே இந்த புத்த மடாலயம் அல்லது விஹாரம் கட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. புத்தர் மற்றும் அவரது சீடர்கள் தங்குவதற்காகவே கோஷித் ராம் எனும் வணிகரால் இது கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
கௌசாம்பி நகரத்திற்கு அடிக்கடி விஜயம் செய்த புத்தர் இந்த விஹாரத்தில் தனது பெரும்பாலான உரைகளை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
பக்னாஷேஷ் எனும் வரலாற்றுப்பொருட்கள் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அலாஹாபாத் நகர அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications