தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.
வைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.
போகிற வழியில் இரண்டு பக்கமும் கடைகள் சூழ்ந்திருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையே இவ்விடத்தை பார்க்க உகுந்த நேரம். இயற்கை அழகை ரசித்து ஓய்வெடுக்க இது நல்ல ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications