பிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும்.
1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. இதே போல் பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் உள்ளன. இவையிரண்டும் இவ்விடத்திற்கு சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
பல அலங்காரச் செடிகள் மற்றும் மரங்களும் இங்குள்ள செடி வளர்ப்புப் பண்ணையில் கிடைக்கும். உச்சி காலத்தில் இப்பூங்கா தோட்டக்கலை பற்றிய பொருட்காட்சிக்கும் ஏற்பாடு செய்யும். மிக குறைந்த நுழைவு கட்டணத்தில் உள்ளே செல்லலாம்.