கோஹிமாவில் பார்வையிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக துணை ஆணையரின் மாளிகை உள்ளது. இது காலனி ஆதிக்க காலத்தில் இருந்து நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்படும் வரை, நாகா மலைப்பகுதிகளின் நிர்வாகத் தலைமையகமாக இருந்த இந்த இடமாகும்.
பிரிட்டிஷ் மற்றும் நாகா கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் கட்டிடக்கலையின் அற்புதமாக உள்ளது. கோஹிமா போர் கல்லறைகளுக்கு அருகில், நகரின் மையத்தில் உள்ள இந்த மாளிகையில், அதன் அழகை மெருகூட்டும் வகையிலான தோட்டங்களும் உண்டு.
இரண்டாம் உலகப்போரின் போது மிகுந்த இரத்தம் சிந்திய வரலாற்றைப் பெற்றிருக்கும் இந்த மாளிகை, போரின் போது முழுமையாக அழிவுற்று, போருக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டது.
'டென்னிஸ் மைதான போர்' என்ற பெயரில் இந்த மாளிகையின் டென்னிஸ் மைதானத்தில் வைத்து நடந்த போரின் முடிவு, தெற்கு ஆசியாவில் உலகப்போரின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகும்.
இந்த மாளிகையின் டென்னிஸ் மைதானத்தில் தான் நேச நாட்டு படைகள் மற்றும் ஜப்பானியர்கள் என சுமார் 9500 பேர் போரில் ஈடுபட்டு உயிரிழந்தனர்.