கோஹிமா மிருகக்காட்சி சாலை அல்லது விலங்கியல் பூங்கா நாட்டிலேயே மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகவும் மற்றும் நாகாலந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கியமான சுற்றுலாதலமாகவும் உள்ளது.
இயற்கையாகவே மலை மீது உருவாக்கப்பட்டிருப்பதால் விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த மிருகக்காட்சி சாலை உள்ளது. இந்த மலைப்பகுதிகள் விலங்குகளின் வாழிடமாக அமைவதற்காக வேண்டி புதுமையான வழிமுறைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மலையேற்றம் செய்து நாகாலாந்தின் தாவர மற்றும் விலங்கு வகைகளை கண்டு மகிழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது. நாகாலாந்து மாநிலத்தின் பறவையாக அறிவிக்கப் பட்டுள்ள டிராகோபான் பறவையை இந்த மிருகக்காட்சி சாலையில் காண முடியும்.
மிகவும் அரிய வகை பறவையான இவற்றில் 500 மட்டுமே இன்றளவில் உயிருடன் உள்ளன. இது மட்டுமல்லாமல், மாநில அரசின் விலங்காக உள்ள 'மிதுன்' வகை காட்டெருமைகளும் கோஹிமா விலங்கியல் பூங்காவில் உள்ளன.
பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை கொண்டுள்ள இந்த பூங்காவில் கோல்டன் லாங்கூர் மற்றும் ஆசிய கருப்புக் கரடிகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.