கோலாபூரின் எழில்களில் ஒன்றான பவானி மண்டபம் சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் வம்சத்தோடு தொடர்புடையது. பவானி மண்டபம் என்பது பவானி தெய்வத்திற்கான கோயிலை உள்ளடக்கியுள்ளது.
கோலாப்பூரின் பிரத்யேக கலையம்ச அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும் இந்த புராதன கட்டமைப்பு ‘கோலாப்பூரின் கிரீடம்’ என்ற பிரபல்யமாக போற்றப்படுகிறது.பவானி மண்டபம் அப்போதைய கோலாப்பூர் அரசர் இரண்டாம் சிவாஜி மஹாராஜாவால், கோலாப்பூர் ராஜ்யத்திற்கு தன்னாட்சி உரிமை கிடைத்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில் பவானி தெய்வத்திற்கான கோயில் உள்ளது.
இதன் கட்டமைப்பு ஆரம்பத்தில் 14 சதுரங்களை கொண்டதாக அமைந்திருந்தது. பின்னர் வரலாற்று காலத்தில் முஸ்லிம் மன்னர் ஒருவரின் படையெடுப்பின் போது அவற்றில் 7 சதுரங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன.இந்த மண்டபத்தின் மைய அரங்கு மிக விசாலமானதாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கிறது. இந்த மண்டபத்தில் ஷாகு மஹாரஜாவின் சிலையும் மற்றும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளும், அலங்கார அம்சங்களும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications