சௌராஸி எனும் இந்த சிறிய கிராமம் பிராச்சி ஆற்றின் வலது கரையில் உள்ளது. பராஹி, அமரேஷ்ரவர் மற்றும் லட்சுமிநாராயன் போன்ற தெய்வங்களுக்கான கோயில்கள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளன. பராஹி அல்லது வராஹி என்று அழைக்கப்படும் தெய்வம் தாய்க்கடவுளான தேவியை குறிக்கிறது.
10ம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் இந்த பராஹி கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பன்றிமுகத்துடனும் பானை வயிற்றுடனும் இந்த பராஹி அல்லது வராஹி தெய்வம் காட்சியளிக்கிறது. இதன் ஒரு கையில் மீனும் மறு கையில் ஒரு குவளையும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நெற்றிக்கண் ஒன்றையும் இந்த தெய்வம் கொண்டுள்ளது.
தாந்திரிக பூஜைச்சடங்கு முறைகளின்படி இந்த தெய்வத்துக்கு பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்கள் மற்றும் அலங்கார அம்சங்களையும் இந்த கோயிலில் காண முடிகிறது. இந்த கோயிலின் பிராதன வளாகத்தின் முன்பகுதியில் ஒரு செவ்வ வடிவிலான முகமண்டபம் அமைந்திருக்கிறது.
இந்த தனித்தன்மையான பராஹி தெய்வத்தை தரிசிக்க ஏராளமான யாத்ரீகர்களும் பயணிகளும் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்த ஸ்தலத்திலுள்ள இதர இரு கோயில்களான அமரேஷ்வர் மற்றும் லட்சுமிநாராயண் போன்றவையும் வெகுவாக பார்வையாளர்களை கவர்கின்றன.