கொப்பல் மாவட்டத்தில் கங்கவதி தாலுக்காவில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த கனககிரி ஆகும். இதன் ஆதிப்பெயர் சுவர்ணகிரி என்பதாக இருந்துள்ளது. இது ஒரு மௌரிய சாம்ராஜ்யத்தின் தெற்குப்பிரதேச தலைநகரமாக இருந்துள்ளது.
தங்கமலை என்று அழைக்கப்படும் இந்த கிராமம் பல புராதன கோயில்களுக்கு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் கனகசலபதி கோயில் முக்கியமானதாக பிரசித்த பெற்றுள்ளது. தன் அழகிய கோயில் சிற்பக்கலை வடிவமைப்புக்காக இது புகழ் பெற்று விளங்குகிறது.கனகிரியில் பல்குணா என்றழைக்கப்படும் வருடாந்திர திருவிழாக்கொண்டாட்டத்திற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நகரத்திற்கு வெளியிலுள்ள ராஜக்குளியல் ஸ்தலம் முக்கியமான வரலாற்றுச்சின்னமாகவும் உள்ளூர் சுற்றுலா அம்சமாகவும் பெயர் பெற்றுள்ளது. கண்ணிருக்கும் அனைவரும் கனகபுரியை கண்டு மகிழ வேண்டும் என்பதாக இந்த கனகபுரி ஸ்தலத்தை சிறப்பாக சொல்லப்படுகிறது.இது கொப்பல் நகரத்திலிருந்து 37 கி.மீ தூரத்திலும், கங்கவதி நகரத்திலிருந்து 16.7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அருகில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுடனும் இது நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸி அல்லது ஆட்டோவிற்கு பதிலாக, பஸ் மூலமாக பயணம் செய்வது சிக்கனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.