சம்பல் ஆற்றின் கரையில் உள்ள அமர் நிவாஸ் எனும் இடத்தில் இந்த சம்பல் கார்டன் அமைந்துள்ளது. எழில் நிறைந்த இயற்கை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அழகிய பெரிய பூங்கா ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்கிறது. இந்த பூங்காவின் மையத்தின் உள்ள தடாகத்தில் ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளதோடு இதில் சில முதலைகளும் காணப்படுகின்றன.
ஒருகாலத்தில் இங்குள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்துள்ளன. இருப்பினும், 20 ம் நூற்றாண்டின் மத்தியில் அவை வேட்டையாடப்பட்டு விட்டன. எஞ்சிய சில முதலைகள் இந்த பூங்காத்தடாகத்தில் காணப்படுகின்றன. கரியல் எனப்படும் நீண்ட மெல்லிய வாயைக்கொண்ட முதலையை இங்கு பார்க்கலாம்.