கோட்டா நகரத்தில் உள்ள கரடியா மஹாதேவ் கோயில் எனும் இந்த முக்கியமான கோயில் சம்பல் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்திலிருந்து பார்க்கும்போது சம்பல் ஆற்றுப்பாதாளமும் அதனை சூழ்ந்துள்ள சமவெளிப்பிரதேசமும் அசர வைக்கிறது.
இந்தியாவில் உள்ள இயற்கை ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது விஜயம் செய்து பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி இது. கோட்டா நகரத்தில் மிக முக்கியமான பிக்னிக் ஸ்தலமாகவும் இது புகழ் பெற்றுள்ளது. இந்த பிரதேசத்தின் அமைதியும் எழிலும் ஏராளமான பயணிகளை இங்கு கவர்ந்து இழுக்கின்றன.