கேரளாவிலுள்ள புராதன தேவாலயங்களில் ஒன்றாக இந்த அதிரம்புழா செயிண்ட் மேரி தேவாலயம் புகழ்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் கிறிஸ்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். 835ம் ஆண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
கன்னி மேரிக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் புனித செபாஸ்டியன் சிலை ஒன்றும் பக்தர்களை வெகுவாக கவர்கிறது. வரலாற்றுக் குறிப்புகளின்படி இந்த சிலை போர்த்துகீசிய கடற்பயணியான லியனார்ட் டி’குருஸ் என்பவரால் 1687ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கோட்டயத்திலிருந்து10 கி.மீ தொலைவில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. 19 ம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதியின் முக்கிய ஆன்மிக மற்றும் கலாச்சார அடையாளமாக இந்த தேவாலயம் பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
பல திருவிழாக்களும் இந்த தேவாலயத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன் வரலாற்றுப்பின்னணி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் போன்ற அம்சங்களுக்காக ஏராளமான பயணிகள் இந்த தேவாலயத்தை தரிசிக்க வருகை தருகின்றனர்.