"எகோலாஜிகல் சென்டர் ஆப் லடாக்" என்றழைக்கப்படும் லடாக் சூழ்நிலை வளர்ச்சி குழு, 1983 ஆம் வருடம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான பணியாளர்களால் நிர்வாகிக்கப்படும் இந்த குழுவை வழி நடத்துவது சேவாங் ரிக்ஜின், என்ற திபெத்தியன் இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
இந்த குழு ஆரம்பிக்க முக்கிய காரணம் இந்த வட்டாரத்தின் சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்ச்சி உண்டாக்கவே. நீண்ட கால வளர்ச்சி, இந்த வட்டாரத்தின் பண்பாட்டின் முக்கியத்துவம், இந்த வட்டாரத்தின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கான எண்ணத்தை மேம்பதுத்துதல், சமுதாயத்தை சார்ந்த வளர்ச்சி திட்டம் போன்றவைகள் தான் இந்த குழுவின் குறிகோள்கள். இது போக மற்று தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தவும் இந்த குழு பாடுபடுகிறது.
இந்த வளர்ச்சி குழு சோலார் சக்தியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாக பாடுபட்டு வருகிறது. மேலும் இதனை கொண்டு இந்த வட்டாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கின்றனர். சொல்லோடு நிற்காமல், உள்ளூர் மக்களுக்கு பயன்படும் வகையில் பல ஹைட்ராலிக் முசலப்பம்பி இங்கு நிறுவப்பட்டிருக்கிறது.