17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், லேவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பயணிகள் இந்த இடத்தை லே-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை வழியாக வந்தடையலாம்.
இந்த கோவிலை கட்ட அதிகப்படியான தங்கங்களும் செம்புகளும் பயன்படுத்தியதால், இது தனிப்பட்ட சிறப்புடன் விளங்குகிறது. மைத்ரேய புத்தா என்றழைக்கப்படும் சிரிக்கும் புத்தா அல்லது பியூச்சர் புத்தாவின் சிலை 20 அடி உயரத்தில் இங்கு நிறுவப்பட்டிருக்கிறது.
திலோப்பா, மர்பா, மில ரஸ்பா மற்றும் நரோபா போன்ற பிரம்மாண்ட ஓவியங்களை இங்கு காணலாம். புத்தர் மற்றும் ரெட் ஹாட் செக்டை சேர்ந்த மக்களின் ஓவியங்களும் கோவில் சுவற்றில் தீட்டப்பட்டிருக்கும்.
திபெத்தியன் புத்திஸ்ட் கனானின் பிரதியான செர்சாங் கையெழுத்துப்படியில், பலத்தரப்பட்ட திபெத்தியன் புத்திசம் செக்டில் இருக்கும் புனித வார்த்தைகளை வெள்ளி, தங்கம் மற்றும் செப்பு வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கிறது. அவை இந்த கோவிலில் வருடக் கணக்காக பாதுகாக்கப்பட்டு வருகிறது.