சுரு ஆறு வற்றியதால் உருவானதே இந்த சுரு பள்ளத்தாக்கு. இயற்கை அழகுக்காக புகழ் பெற்று விளங்குகிறது இந்த இடம். இந்த பள்ளத்தாக்கில் சுமார் 25000 பேர் குடியிருக்கிறார்கள்.
இவர்கள் திபெத்தியர்கள் மற்றும் புத்திஸ்ட் தர்ட் சமுதாயத்தின் வம்சாவழியினர். திபெத்திய புத்திஸ்ட் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த இந்த மக்கள் 16-ஆம் நூற்றாண்டில் ஷியா இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டனர்.
இந்த பள்ளத்தாக்கின் கீழ் பகுத்தில் இருந்து பார்த்தால், குன் மற்றும் நன் மலை உச்சிகளின் அகலப் பரப்புக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம். சுரு பள்ளத்தாக்கு, சன்ச்கர் மற்றும் படும் போன்ற சுற்றுலாத் தலங்களால் சூழ்ந்திருக்கிறது. பயணிகள் தங்குவதற்கு ரங்டம் என்ற இடத்தில் வசதிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications